Tuesday, January 9, 2018

பருவங்களின் விளக்கம்


பருவங்களின் பிரிவு (பொது)


காப்புப்பருவம்

  • இப்பருவம் இறைவனை வணங்கும்படிச் செய்யும் பருவமாகும். இப்பிள்ளைத்த்மிழின் நோக்கம் இயற்றியவறை மேன்மையடையச் செய்வதாகும்.
  • இப்பருவம் முதன்மையாக அமைவதால் காக்கும் தொழிலைக் கொண்டிருக்கும் திருமாலையே முதன்மை கடவுளாகப் போற்றுகின்றனர்.

செங்கீரைப்பருவம்

  • கீர் என்றால் சொல் என்று பொருட்ப்படும். குழந்தைகள் இப்பருவதில் தான் மழலை மொழியில் பேசத் தொடங்குவர்; ஓசை எழுப்புவர்.
  • இக்கால பருவதில் பெற்றோர்கள் மற்றும் சுற்றத்தார்கள் குழந்தைகள் சிறந்த சொற்களை மழலையில் பேச வேண்டிக்க்கொள்வர்.
  • குழந்தைகள் இப்பருவதில் கைகளை நிலத்தில் வைத்து முகத்தை வான் நோக்கி காண்பர்.

தாலப்பருவம்

  • தால் என்பதற்கு நாக்கு என்று மறு பொருள் உண்டு. நாக்கை அசைத்து தாலாட்டு பாடி குழந்தைகளை உறங்க வைப்பதைத் தான் இப்பருவம் உணர்துகிறது.

சப்பாணிப்பருவம்


  • இப்பருவதில் குழங்தைகள் உட்காற்ந்து கைக்கொட்டி விளையாடுவர். சுற்றயத்தார் அனைவரும் குழந்தைகளைக் கைத்தட்டி அழைப்பர்.
  • சப் என்றால் ஒலி, பாணி என்றால் கைகள் என பொருட்படும்.
  • சப்+பாணி = சப்பாணி

முத்தப்பருவம்

  • பருவங்களிலே இஃது சிறந்தப் பருவமாக கருதப்படுகிறது.
  • குழந்தைகளிடமிருந்து முத்தம் பெருவதே இப்பருவம்.

வருகைப்பருவம்

  • இதனை வாரனைப் பருவம் எனும் அழைப்பர்.
  • வரவேற்பு எனபது தமிழர் மரபில் மிகச் சிறந்த ஒன்று.
  • குழந்தைகள் தட்டி தட்டி நடந்து வரும் பொழுது வருக வருக என மன மகிழ்ச்சியுடன் அழைப்பதே இப்பருவம்.
  • இப்பருவதில் வரவேற்பின் சிறப்பை எடுத்துறைப்பர்.

அம்புலிப்பருவம்

  • அம்புலி - சந்திரன்
  • வின்னில் இருக்கும் சந்திரனை விளையாட அழைப்பதே இப்பருவம்.

நோக்கம்

  1. குழந்தையை அம்புலிக்கு சரி நிகராக என்னுதல்.
  2. அம்புலியையும் குழந்தையையும் வேறு படுத்துதல்.
  3. அம்புலியுடன் விளைடயாடுவதால் நன்மைகளைக் கூறுதல்
  4. அம்புலி வர வில்லையெனில் என்ன தண்டனைக் கிடைக்கும் என்று எடுத்துரைத்தல்.



பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியன

நீராடற்பருவம்

  • இப்பருவம் குழந்தையை நீராட வேண்டிப் பாடும் பருவமாக அமைகிறது.

அம்மானைப்பருவம்

  • அம்மானை என்பது ஒரு வகையான விளையாட்டாகும். இதனை கழங்கு என்றும் கூறுவர். கழங்கு என்றால் மரம், ஈயம் ஆகிய பொருட்களைக் கொண்டு பந்து வடிவில் உருவாக்கும் ஒரு விளையாட்டு பொருள். இக்கழுங்கை ஒருவர் பின் ஒருவர் எரிந்து விளையாடுவர்.
  • அம்மானை ஒரு வகையான விளையாட்டைத் தாண்டி கதை அமைப்பை இசையோடு கூறும் இலக்கியமாக அமைந்தது. 

ஊசற்பருவம்

  • ஊஞ்சல் ஆடுதலையே ஊசல் என்று கூறுவர்.குழந்தையை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவதின் சிறப்பை அனைவருக்கும் எடுத்துரைப்பர்.
  • அதுமட்டும் இன்றி ஊஞ்சல் அமைக்கும் வகை, ஆடும் வகை, குழந்தையில் சிறப்பு, காண்போருக்கு விளையும் கருத்துகளை எடுத்துரைப்பர்.



    No comments:

    Post a Comment